
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில், 36 நாட்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்து தமிழக முதலமைச்சருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைப் பதிவிட்டுள்ளார்.



