
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்கத் தவறிவிட்டதாகவும், உரிய நேரத்தில் காவிரியில் நீரைத் திறந்து விடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் கர்நாடகம் 26.954 டி.எம்.சி. நீரைத் தந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் 3 நிலவரப்படி, கே.ஆர்.எஸ். அணையில் 23 டி.எம்.சி., கபினி அணையில் 18.6 டி.எம்.சி., ஹாரங்கியில் 7.8 டி.எம்.சி. மற்றும் ஹேமாவதி அணையில் 28 டி.எம்.சி. என மொத்தம் 77.53 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், இவ்வளவு நீர் இருப்பு இருப்பதால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்கக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த போதிலும், ஆணையத்தின் உத்தரவை மீறி பிலிகுண்டுலுவிற்கு வினாடிக்கு அதிகபட்சமாக 550 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்கவேண்டிய 26.954 டி.எம்.சி. நீரை உரிய நேரத்தில் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





