
நான் எப்போதும் விஐபி தான்!
பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நீனா குப்தா, பரேலி விமான நிலையத்தின் முன்பதிவு செய்யப்பட்ட ஓய்வறைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். நீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அந்த முழு சம்பவத்தையும், ‘விஐபி’களுக்காக விமான நிலைய லவுஞ்சில் தனது நுழைவு மறுக்கப்பட்டதையும் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்பு பல முறை நான் இந்த ஓய்வறைக்குள் சென்று வந்துள்ளேன். ஆனால் இப்போது, விஐபி க்களுக்கு மட்டும் தான் என்று கூறி மறுத்துள்ளனர். நான் அப்போதும், இப்போது, எப்போதுமே விஐபி தான் பரேலி என்னை அவமானப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தினார். அப்படியே அழுதபடி உள்ள ஈமோஜிகளையும் பகிர்ந்துள்ளார்.



