
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று திரைப்பட நடிகர் தாடி பாலாஜி விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் புதிதாக உருவான குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு, நடிகர் தாடி பாலாஜி வருகை தந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் சுற்றுப்பயணம் வெற்றியடைய பிரார்த்தித்தேன் என்றும், மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், இது 2026 தேர்தலில் வாக்குகளாக மாறும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் தாடி-பாலாஜி விமர்சித்தார்.


