
முன் ஜாமீன் வழங்கி உத்தரவு.
திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன்மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து அவர் தரப்பில்முன் ஜாமீன் வழங்கக் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாடியுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கில் அக்.16 வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யக் கூடாது எனவும் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



