மாமியாரை கொலை செய்ய மாத்திரை கேட்ட பெண்!

Advertisements

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில், ஒரு பெண் தனது மாமியாரை கொல்ல மருத்துவரிடம் மாத்திரை கேட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், மருத்துவர் சுனில் குமார் கூறியதாவது, “பிப்ரவரி 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, சஹானா என்ற பெண் வாட்சப்பில் எனக்கு ஒரு செய்தி அனுப்பினாள். பெங்களூரிலிருந்து பேசுவதாகக் கூறிய அவர், தனது மாமியாரை கொல்ல 2 மாத்திரைகளைப் பரிந்துரைக்கச் சொன்னாள்.

மருத்துவர்களின் கடமை உயிர்களைக் காப்பாற்றுவது, உயிர்களை எடுக்குவது அல்ல என்று நான் அவளிடம் கூறினேன். ஆனால், அவள் மாத்திரைகளின் பெயர்களை எனக்கு அனுப்புமாறு கெஞ்சினாள். நான் அதிர்ச்சியடைந்து, அவளுடைய கோரிக்கையை நிராகரித்தேன்.”

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *