Advertisements

மியான்மர் நாட்டில் காலை 6.41 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்கனவே அதிகாலை 5.03 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.
இதனை தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழப்புகள் மற்றும் உயிர் சேதங்கள் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Advertisements




