
மோர்கன் பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு.
அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாணம் பால்டிமோரில் உள்ள மோர்கன் பல்கலைக் கழகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்தனர்.பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 9 மணியளவில் திடீரென்று நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
சத்தம் கேட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், போலீஸ் வாகனங்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். மர்ம நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.



