மகா கும்பமேளாவில் ஜெய்ஷாவின் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கிய துறவிகள்!

Advertisements

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான  ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராகக் கடந்த மாதம் பொறுப்பேற்றார்.

இதன்மூலம் 35 வயதான ஜெய்ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.

அந்நிகழ்வில் அவரது மகன் ஜெய் ஷா தனது ஆண் குழந்தையுடன் கலந்து கொண்டார். கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவிகள் ஜெய் ஷாவின் ஆண் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *