Advertisements

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார். போட்டியில், சிறப்பாக விளையாடிய ஜானிக் சின்னர் 2 – 0 என்ற என்ற செட் கணக்கில் ஜிரி லெஹெகாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
Advertisements



