Men’s squash: பாகிஸ்தானை வீழ்த்தித் தங்கம் வென்ற இந்தியா!

Advertisements

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தித் தங்கம் வென்றுள்ளது.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

இந்திய ஸ்குவாஷ் அணி பாகிஸ்தான் ஸ்குவாஷ் அணியை இறுதிப் போட்டியில்  2-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இது இந்தியாவுக்கு 10வது தங்கப்பதக்கம் ஆகும். இந்திய அணியின் அபாய் சிங் பாகிஸ்தான் வீரருக்கு எதிரான போட்டியினை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார். அதேபோல் இந்திய அணியின் மற்றொரு வீரரான ஷவ்ரோவ் கோசல் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார்.

மொத்தம் மூன்று வீரர்கள் கொண்ட அணி இரு தரப்பிலும் களமிறங்கியது. இறுதியாக வெற்றியைத் தீர்மானிக்கும் ’பெஸ்ட் ஆஃப் த்ரீ’ இந்திய அணியின் மகேஷ், பாகிஸ்தான் வீரர் நசீர் இக்பாலிடம் 8-11, 3-11 மற்றும் 2-11 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் இந்திய அணியின் ஷவ்ரவ் கோஷல் பாகிஸ்தான் அணியின் முகமது அசீமை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையிலான போட்டியில் இந்திய அணியின் ஷவ்ராவ் கோஷல் 11-5, 11-1 மற்றும் 11-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அபாய் சிங்கும் பாகிஸ்தான் அணி சார்பில் நூர் ஜமான் களமிறங்கினர். மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இறுதிச் சுற்றில், அபாய் சிங் 11-7, 9-11,7-11, 11-9 மற்றும் 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான்  அணியை வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *