Mamata Banerjee: மம்தா பானர்ஜி பெற்றோர் பற்றி பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு!

Advertisements

புதுடெல்லி: மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியின் பெற்றோர் குறித்து பாஜக தேசிய துணை தலைவர் திலீப் கோஷின் சர்ச்சை பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குறித்து பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் பேசிய கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த எம்.பி. திலீப் கோஷ் பேசியது தொடா்பான வீடியோ பதிவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

‘மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள் (மம்தா) தேவை’ என்றும், பாஜகவைச் சோ்ந்தவா்கள் மேற்கு வங்கத்துக்கு அந்நியா்கள் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னெடுக்கும் பிரசாரத்தை திலீப் கோஷ் விமா்சித்துப் பேசுகையில், ‘அவா் (மம்தா) கோவாவுக்கு சென்றால், கோவாவின் மகள் என்று பேசுகிறாா்.

திரிபுரா சென்றால் அந்த மாநிலத்தின் மகள் என்று பிரசாரம் செய்கிறாா். முதலில் அவா் யாருடைய மகள்? என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று கூறியதுடன் மேலும் சில சா்ச்சை கருத்துகளையும் பேசியுள்ளாா்.

இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் திரிணாமுல் சாா்பில் திலீப் கோஷ் மீது புகாா் அளிக்கப்பட்டு உள்ளது. திரிணாமுல் காங்கிரஸைச் சோ்ந்த மேற்கு வங்க அமைச்சா் சசி பாஞ்ஜா இது தொடா்பாக கூறுகையில், ‘பாஜகவின் உண்மையான முகம் எவ்வாறு உள்ளது என்பதை வெளிகாட்டும் வகையில் திலீப் கோஷ் பேசியுள்ளாா். அவா் தனது கருத்துகளுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்க வேண்டும்.

மம்தா பானா்ஜியின் பரம்பரை குறித்துப் பேசி அரசியல் அநாகரிகத்தை அரங்கேற்றியுள்ளாா்’ என்று தெரித்தாா்.

திரிணமூல் சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், ‘மேற்கு வங்க பெண்கள் குறித்து திலீப் கோஷுக்கு மரியாதை கிடையாது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. முன்பு ஹிந்து மத பெண் தெய்வங்களை அவமதித்து திலீப் கோஷ் பேசியுள்ளாா். நாட்டின் ஒரே பெண் முதல்வராகவும் மேற்கு வங்கத்தின் அடையாளமாகவும் திகழும் மம்தாவையும் அவா் அவமதித்துள்ளாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *