
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118ஆவது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அணைத்து கட்சி தலைவர்களும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் . அதே நேரத்தில், சென்னை, அண்ணா சாலை, நந்தனம் சந்திப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச்சிலைக்கு காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துவார்கள் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , ஓ. பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்த ஒரு விஷயம் அரசியலில் பேசுபொருளாக மாறியது .இவ்ரகள் ஒன்றாக வந்ததற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இணையங்களில் செய்தி வெளியானது . இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் , அதிமுகவில் சிலர் என்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ராமநாதபுரம் பசும்பொன்னில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இவர்கள் மூவரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை.நான் வாய் திறந்தால் எல்லாவற்றையும் பேசி விடுவேன். வாக்கு கொடுத்துவிட்டேன் லட்சுமண ரேகையை தாண்ட மாட்டேன் என அமித் ஷாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆனால், என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று அண்ணாமலை கூறினார்.
மேலும், சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலை பேசுகையில் , ‘தமிழக அரசு உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஊழல்கள் செய்திருப்பதாகவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, மேலும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மீதும் ஊழல் புகார்கள் வந்துள்ளது, திமுக அரசின் இந்த ஊழல் புகார்களை மறைக்கும் விதமாக பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் தமிழர்கள் குறித்து பேசியதாக பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருகிறார்.
கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் பிகார் மக்களை கொச்சையாக பேசியுள்ள விடியோ காட்சிகள் உள்ளன. திமுக கட்சியினர் தான் பிகார் மக்களை விமர்சித்து பேசியதாக பிரதமர் கூறினார்.மேலும், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திமுக எதிர்த்து வருகிறது. இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான், திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் முறைகேடுகளும் செய்துள்ளது. அவை அனைத்தும் இந்த நடவடிக்கையின் மூலம் சீர் செய்யப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என யாரும் கூற முடியாது. யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை, அனைவரது வாக்குரிமையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என தெரிவித்தார்.




