Maharashtra Accident: ஆட்டோ மீது மினி வேன் மோதி 8 பேர் பலி!

Advertisements

மகாராஷ்டிராவில் ஆட்டோ மீது மினி வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மினி வேன் மகாராஷ்டிர  மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பல்கான் ஜோகாவிற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் எதிரே வந்த ஆட்டோ மீது அதி பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பேர், மினி வேன் டிரைவர் என மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *