Lok Sabha Election 2024: திமுக ஆட்சியில் டாஸ்மாக்கை தாண்டிச் செல்கிறது போதை பொருள் கலாசாரம்!

Advertisements

மின்கட்டணம், சொத்துவரி, பால்விலையென அனைத்தையும் உயர்த்தி திமுக அரசுப் பெண்களை வஞ்சிப்பதாகக் காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டி உள்ளார்.

தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்துச் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் பிரசாரம் மேற்கொண்டார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வாகனத்தில் நின்றபடி பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவும், பாஜகவும் வாரிசு அரசியல் செய்கின்றன. ஜெயலலிதாவுக்கு பின்னால் நிறைய சதி நடைபெற்றது. அதற்குக் காரணம் பாஜக தான். ஆனால் அவர்களோடு இன்று டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ளார்.

ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இங்குப் பாதி பேருக்குக் கிடைப்பதில்லை. திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு அனைத்தையும் ஏற்றிவிட்டு அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்வது? பெண்களை வஞ்சிக்கின்ற அரசியல் செய்கிறது திமுக. தற்பேது டாஸ்மாக்கை தாண்டி நடைபெறும் போதைப் பொருள் விற்பனையால் பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மக்களுக்குத் தேவையான ஒவ்வொரு திட்டத்தையும் ஆராய்ந்து செயல்படுத்தினார். அதில் ஒன்று தான் 7.5% உள் இட ஒதுக்கீடு. இன்று அத்திட்டத்தின் மூலம் நமது அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் டாஸ்மாக்கை தாண்டிச் செல்கிறது போதை பொருள் கலாசாரம். இதன் மூலம் பெண்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் உழைத்த அதிமுக வெற்றி பெற தேனி வேட்பாளர் நாராயணசாமியை வெற்றி பெற வையுங்கள் எனப் பிரச்சாரத்தில் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *