
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தாய்மொழி தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் மறைந்திருந்த வரலாற்றை மண்ணில் அகழ்ந்து வெளிப்படுத்தி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்ட நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமைமிக்க மொழி மட்டுமல்ல; பிறமொழிகளின் துணையின்றி தனியாகச் செயல்படும் ஆற்றலுள்ள செம்மொழி!
உலகம் முழுவதும் நம் உயர்தனிச் செம்மொழி பரவட்டும்! எனக் கூறியுள்ளார்.
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும்… pic.twitter.com/qz9vW730HN
— M.K.Stalin (@mkstalin) February 21, 2025
