
மேற்கு வங்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சென்ற கார் நேற்று ஒரு விபத்துக்குள்ளானது.
விபத்து நேர்ந்தபோது, சவுரவ் கங்குலி பர்தமானுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுரவ் கங்குலி துர்காபூர் விரைவு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, லாரியுடன் மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். இதனால், பின்னால் வந்த கார் மோதியதில் அவரது கார் லேசாகச் சேதமடைந்தது.
விபத்தின்போது வாகனங்கள் அதிவேகத்தில் செல்லாததால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
துர்காபூர் விரைவு சாலையில் சுமார் 10 நிமிடங்கள் காரை நிறுத்திய அவர், பிறகு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
