Advertisements

கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தேர்தல் பரப்புரையைத் தொடக்கியுள்ளார்.
கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுப் பரப்புரையைத் தொடங்கினார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், நடந்து சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, கோவை தெற்குத் தொகுதியில் மகத்தான வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
பரப்புரையின்போது, திமுக மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, திமுக தீர்மானக்குழுச் செயலாளர் கார்த்திக், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisements



