இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் – அப்பாவு அறிவிப்பு!

Advertisements

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு எடுக்கும் என்று சாபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அலுவலல் ஆய்வுக் குழு கூட்டத்தில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சட்டசபை கூட்டத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *