
ரேஷன் ஊழல் தொடர்பாக அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கின் கைது!
இரவு வரை நீடித்த சோதனைகளின் போது, ரேஷன் விநியோக ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் மல்லிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, புலனாய்வு நிறுவனங்களை பழி வாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மல்லிக்கிற்கு ஏதேனும் நேர்ந்தால் பாஜக மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மம்தா எச்சரித்துள்ளார்.



