ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

Advertisements

பெங்களூரு:

தமிழகத்தில் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை முதல்வராக இருந்தபோது, அவர் வருமானத்திற்கு மிஞ்சிய சொத்துக்களை குவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்குப் பிறகு, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், அவர் ரூ.66.65 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கி குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு, ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து, அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இதையடுத்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் நகைகளைத் தமிழக அரசிடம் பிப்ரவரி 14, 15-ந் தேதிகளில் ஒப்படைக்கும்படி கடந்த மாதம் (ஜனவரி) உத்தரவிட்டது.

இந்நிலையில் பெங்களூரு சிட்டி சிவில் கோா்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *