
ஜப்பான் – வியட்நாம் இடையேயான நல்லுறவு 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து ஜப்பான் இளவரசர் மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
வியட்நாம்: ஜப்பானுக்கும் வியட்நாமிற்கும் இடையேயான பரஸ்பர நல்லுறவானது 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை போற்றும் வகையில், ஜப்பானின் பட்டத்து இளவரசர் அகிஷினோ, தனது மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணாம் மேற்கொண்டுள்ளார்.
வியட்நாமின் முதல் அதிபர் ஹோ-சி-மின் வாழ்ந்த இல்லத்தில் அஞ்சலி செலுத்திய, ஜப்பான் இளவரசர் தனது மனைவியுடன் சேர்ந்து மீன்களுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.
தற்போது நிலவி வரும் சீனாவின் அச்சுறுத்தலை, எவ்வாறு எதிர்கொள்வது, எனத் தெற்காசிய நாடுகளுடன் பேசி, அவர்களுடன் நல்லுறவைப் பேணுவதற்கான முயற்சிகளை ஜப்பான் மேற்கொண்டுவருகிறது.

