
வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால், சிலருக்கு அவை இருப்பது பிடிக்காது. ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் பல விதமான நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும்.
இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது. அதை அடித்து வெளியில் துரத்தாமல் நாம் வீட்டிற்குள் நுழைவதில்லை. ஆனால், சிலர் பல்லி என்ன செய்யப்போகிறது வீட்டில் உள்ள பூச்சிகளைச் சாப்பிட்டு ஓரமாக இருக்கட்டும் எனப் பரிதாபம் பார்த்தும் விடுவதுண்டு.இவை பெரும்பாலும் ட்டின் சுவர்கள் மற்றும் மூலைகளில் காணப்படுகின்றன.
யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஜோதிடத்தில் பல்லிபற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், பல்லியைப் பார்ப்பது சுபம் என்றும் சிலர் அசுபம் என்றும் கூறுகின்றனர். பல்லியைப் பார்ப்பது நல்லதா கெட்டதா எனத் தெரிந்து கொள்ளலாம்
பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அவற்றை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், ஜோதிட நம்பிகையின்படி, பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
அதாவது, பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. சில மாநிலங்களில் புதிய வீட்டின் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளைப் பயன்படுத்தி பூஜை செய்வதுண்டு.
ஏனென்றால், பல்லி வீட்டின் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்ப்படுகிறது. இவ்வளவு ஏன், தமிழகத்தில் பல்லிக்கு எனத் தனி கோயில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா?. வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
தீபாவளி அன்று வீட்டில் பல்லியை இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்குக் கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள். வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளைப் பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம்.
இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்குப் பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது.
அதுமட்டும் அல்ல, பல்லியைப் பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமம் என்பது ஐதீகம். அதாவது, முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் அருள் நமக்குக் கிடைக்கும். அத்தத்துடன், அன்னை லட்சுமி தேவியும் உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார்.
சில கோயில்களில் மரத்தைச் சுற்றி பலர் நின்று கொண்டு எதையோ கைகாட்டி பார்ப்பதை பார்த்திருப்போம். அது வேறு எதுவும் அல்ல, கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியைப் பார்ப்பது தேவர்களைப் பார்ப்பதற்கு சமம்.
