
பெங்களூரு:
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறையென இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. 10-ம் தேதி தொடங்கும் விமான கண்காட்சி 14-ம் தேதிவரையென 5 நாட்கள் நடக்கிறது.
தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது.
விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
இந்நிலையில், சர்வதேச விமான கண்காட்சியானது இன்று முதல் தொடங்க உள்ளது.
விமான கண்காட்சியைக் காண பலரும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
