இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 250-க்கும் மேற்பட்டோர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.
பின்னர் தலாவுட் தீவுகளிலிருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியது. இதனைத் தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. பின்னர் இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மேலும் மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
பின்னர் விபத்து குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.


