கனடா பிரதமர் தேர்வில் இந்திய வம்சாவளி பெண் போட்டி!

Advertisements

கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகியதையடுத்து புதிய பிரதமர் வருகிற மார்ச் மாதம் தேர்வு செய்யப்படுகிறார். இதில் பலர் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் கனடா பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளி பெண் எம்.பியான ரூபி தல்லா அறிவித்துள்ளார். டாக்டரான அவர் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார்.

ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ரூபி தல்லா 3 முறை எம்.பியாக இருந்து உள்ளார்.

இதற்கிடையே ரூபி தல்லா கூறும்போது, கனடாவில் 5 லட்சம் பேர் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.

இது ஏற்றுக்கொள்ள முடியாதது. புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாகக் கட்டியெழுப்ப உதவியிருப்பதை நன்கு அறிவேன்.

ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *