முழு ராணுவ பலத்தை கொண்டு இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்.. பாகிஸ்தான் ராணுவ தளபதி அடாவடி பேச்சு

Advertisements

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் மற்றும் பேச்சுவார்த்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா மேற்கொள்ளும் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், உளறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் முழு ராணுவ பலத்தை பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி ஆசிப் முனிர் கூறிய கருத்து பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலால் நாடே கொதித்து போய் உள்ளது. அப்பாவி பொதுமக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளது.இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பீதி அடைந்து இருக்கிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், இந்தியா தாக்கினால் நிலைமை என்ன ஆகுமோ என கதி கலங்கி வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளார். இப்படி சர்வதேச நாடுகளின் ஆதரவும் இந்தியாவுக்கு குவிந்து வருகிறது. இதனால், அச்சம் அடைந்து இருக்கும் பாகிஸ்தான், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது.இந்த நிலையில் பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி ஆசிப் முனிர் கூறிய கருத்து பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

ஆசிம் முனிர் கூறுகையில், ‘பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் முழு ராணுவ பலத்தை பயன்படுத்துவோம்’ என்று கூறியுள்ளார். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மையத்தில் பேசிய முன்னர் கூறியதாவது:- “பிராந்திய அமைதியையே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், ராணுவ பதற்றம் அதிகரித்தால், தங்களை தற்காத்துக்கொள்ள தயங்க மாட்டோம்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *