
விசாரணையில் அபிராமி குழந்தைகளுக்கும் விஷம் அளித்தது தெரியவந்தது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் அபிராமியை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதில் குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அபிராமி சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மீனாட்சி சுந்தரமும் சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளக்காதலில் கருத்தரிக்கும் குழந்தையை கருவிலேயே சிசுவதை செய்வது. கள்ளக்காதாலில் பிறக்கும் குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் வீசி விட்டுச் செல்வது, குழந்தையை கொள்வது. குழந்தையை விலைக்கு மற்றவர்களிடம் விற்றுவிடுவது. குழந்தையை துன்புறுத்துவது போன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், எந்த வகையிலும் தப்பிக்காதவகையில் பாரபட்சமின்றி அபிராமி , மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தண்டனையை போன்று கடும் தண்டனையை வழங்கினால் மட்டுமே குழந்தைகள் மீதான கொடுமையை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.




