Advertisements

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்…
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சமயம் கூறினார்கள்…
மூன்று விஷயங்கள் எவரிடம் இருக்கிறதோ அவர் ஈமானின் சுவையை அறிந்து கொள்வார்
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏனைய அனைத்தையும் விட அவரது விருப்பத்திற்குரியவர்களாக இருக்க வேண்டும்
2. ஒரு மனிதனை நேசிப்பதென்றால் அவரை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசிக்க வேண்டும்
3. அல்லாஹ் எந்த வழிகேட்டிலிருந்து மனிதரைக் காப்பாற்றினானோ அந்த வழிகேட்டின் பால் மீண்டும் திரும்பிச் செல்வதை நெருப்பில் வீசப்படுவது போல் அவர் வெறுக்க வேண்டும்
Advertisements



