சென்னை:
அரசுத் திட்டங்கள் தொடர்பாக நேரடி விவாதத்திற்கு தயாரா என எதிர்க்கட்சி தலைவர் சவால் விடுத்தது குறித்த கேள்விக்கு, ‘என்னைக் கூப்பிட்டால் நான் போவேன்’ எனத் துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்று கூறியுள்ளார். விவாதத்திற்கு அழைத்தால் நிச்சயமாகச் செல்வேன் என்றும், கருணாநிதி பெயரைத் தவிர வேறு யார் பெயரை வைக்க வேண்டும் என்றும், விமர்சனங்கள் வருவதால் பெயரை வைக்காமல் இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.


