
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த மாதத்திலிருந்து குளிர்காலம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்குக் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் மேற்கு மாகாணங்களான வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விடவும் அதிகமாகக் குளிர் வீசிப் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பனித்துகள்கள் சாலை மற்றும ரெயில் தண்டவாளங்களை மூடியதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் வாஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் உள்ளிட்டவற்றில் 61 செ.மீ அளவுக்குப் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. அதிகப்பட்சமாகப் பென்சில்வேனியாவில் வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


