குண்டு மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை!

Advertisements

அன்னதானப்பட்டி:

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

அதே போல் சேலத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குப் பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாளை (திங்கட்கிழமை) மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். மற்றும் ஆங்கில புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ளதால் சேலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது. பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்படுவது வழக்கம் ஆகும்.

இதனால் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகளிடமிருந்து பூக்கள் வரத்து குறைந்து விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து அமாவாசை, ஆங்கில புத்தாண்டு ஆகிய விசேஷ நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

பூக்கள் வரத்தும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகப் பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *