சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் பணவீக்கம் காரணமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
நேற்று வரை சற்று ஸ்திரமாக இருந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.110 அதிகரித்து, ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை கிராமிற்கு 14 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுவது நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணப் பருவத்தில் உள்ள குடும்பத்தினரும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கம் வாங்க முடியாமல் தவிக்கும் சூழல் இதன் மூலம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நீடித்து வரும் நிலையில், இன்றைய விலை உயர்வு நகைப்பிரியர்களை மேலும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

