“கோமாளிகள் கூட்டமா இது?” – தவெக அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

Advertisements

காவிரி விவகாரத்தில் தமிழத்தில் என்ன ஆடு நடத்திறதா, மாடு நடக்கிறதா அல்லது கோழி நடக்கிறதா எது நடக்கிறது என்று எதையும் பார்க்காமல் தமிழக முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தன் உள்ள  காட்டத்தை ஒரு காட்டு காட்டியிருக்கிறார்  திமுக  எதிர்கட்சித் தலைவர் உதயநிதி.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, மறுப்பு ஊசி போட்டால் மனிதன் தன் உணர்வை எப்படி செயழிப்பானோ அதுபோல் தவெக அரசுக்கு செயலழிந்து விட்டது என்று கேலி செய்திருக்கிறார்.

தவெக அரசில் அங்கம் வகிக்கும், ஒட்டுமொத்த அமைச்சர்களும் கோமாளிகளாக தலைமைச் செயலகத்தை சுற்றி வருவதாக அவர்களை தன் பேச்சால் ஒரு சுளுக்கெடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் சீக்கு  கோழி போல் பலவீனமான அரசு அமைந்துள்ளதால் தான் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நாள்தோறும் நம்மிடம் எதிர்த்து கொக்கறிக்கிறது என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். எதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதை அப்படியே ரூட்டை மாற்றும்

செயலில்தான் தவெக அரசு ஈடுபடுகிறது எனவும், ரீல்ஸ் வெளியிடுவதில்தான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தம்  பேச்சால் அமைச்சர்களை சட்டியில் போட்டு வறுத்தெடுக்காத குறையாக வருத்தெடுத்திருக்கிறார்.

காவிரியில் நீர் திறக்காதது, மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு துணை போகும் மத்திய அரசு கண்டித்தும், இந்த விவகாரத்தை மெத்தன போக்குடன் கையாளும் தவெக அரசை கண்டித்தும் தஞ்சையில் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

ஊரான் ஊட்டு உலையில அடுப்பு  எரித்து கொண்டிருக்கும், லாட்டரி விற்ற அமைச்சர், கோயிலில் உடைக்கும் தேங்காயை பொறுக்கி திண்பதுபோல் திரையரங்கில் பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருள் அமைச்சர் என எல்லா அமைச்சர்களும் ஜோக்கர்களாக உள்ளனர். அமைச்சர்கள் எல்லாம் படம் பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் அதற்கு எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள். நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் கூட செய்தியாளர்களை கண்டால் திருட்டு பார்வை ஒன்று பார்த்துவிட்டு  திருடன் போல ஓடி ஒளிந்து கொள்கிறார்.

எல்லாரும் ரீல்ஸ் எடுத்து போடத்தான் லாய்க்கி  என்றிருக்கிறார். ரீல்ஸ் வெறியில் தான் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுகிறார்கள். முதல்வர் விஜய் கூட காவிரி பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல் அதனை திசை திருப்பும் விதமாக மெட்ரோ ரயிலில் சென்று ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் வீடியோ போடுகிறார். அதுவும் அவர் தொடங்கிய புது திட்டத்தில் ஆய்வு செய்தால் பரவாயில்லை. எங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தான் ஆய்வு செய்கிறார்.

இதை அவரது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு அல்வா செய்யாதீங்க. இப்படி உரைக்கும்படி   சொன்னால் தான் அவர்களுக்கு புரியும். தமிழகத்தில் இப்போது பலவீனமான அரசு அமைந்துள்ளது. அங்கு இருக்கும் காங்கிரஸ் கட்சியினரை எதிர்த்து பேச முடியவில்லை. தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என சொல்கிறார். பதிலுக்கு இவர் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்கிறார்.

இப்படி பலவீனமான அரசு அமைந்துள்ளதால் தான் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. எதாவது ஒரு பிரச்சினை வந்தால் உடனே அதை அப்படியே திசை திருப்பும் செயலில்தான் அரசு ஈடுபடுகிறது. டெல்லியில் சென்று விவசாயிகள் போராடா சென்றால் மகாராஷ்டிராவில் இறக்கிவிடப்படுகின்றனர். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி செய்கிறது. அவர்களை எதிர்த்தும் பேசாமல் இருக்கிறார். முதல்வராக பதவியேற்ற பிறகும் பாஜக என்ற சொல்லை இதுவரை விஜய் சொல்லவில்லை. அவ்வளவு பயம் அணிலுக்கு என்று தன் உள்ளக் காட்டத்தை ஒரு காட்டு காட்டியிருக்கிறார்.

ஏன் அடுத்த ஜென்மம் வரை வெயிட் பண்றீங்க தேர்தலுக்கு முன்பு அடுத்த ஜென்மம் என்று வந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என விஜய் சொன்னார். ஏன் அடுத்த ஜென்மம் வரை வெயிட் பண்ணனும், இப்போதே விவசாயி ஆக முடியாதா?.. காவிரி விவகாரத்தில் சட்டசபையில் திமுக கேள்வி எழுப்பும். இதுவரை விவசாயிகளுக்கு அரசு என்ன செய்தது.. விவசாயிகளை கூப்பிட்டு அவர்களது கோரிக்கையாவது கேட்டதா?.. சரமாரியாக நாக்க புடுங்கி சாகலாம் என்ற அளவிற்க ஒன்றல்ல பல கேள்வியை கேட்டியிருக்கிறார்.

ஆக ஆளாலுககு மோதிக் கொண்டிருக்காமல் அனைத்து கட்சிகளம் ஒன்றிணைந்து நம் காவேரியில் அணை கட்டியே தீருவேன் என்று பச்சை குழந்தை போல் அடம்பிடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நடத்தும் போராட்டம் பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *