
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் சிலர் காரில் துரத்திச் சென்ற சம்பவத்தில் காரில் வந்த இளைஞர்களைப் போலீசார் தேடி வந்தனர்.
இந்தச் சம்பவத்தில் நேற்று 2 இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

