Advertisements

பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோர்டா, பின்லாந்தின் ஓட்டோ விர்டானென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-6 (7-3) எனச் செபாஸ்டியன் கோர்டா வென்றார்.
இதில் சுதாரித்துக் கொண்ட ஓட்டோ விர்டானென் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 5 வீரரான செபாஸ்டியன் கோர்டா தொடரிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
Advertisements
