சென்னை: நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தததாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் இன்று (ஆக.13) கைது செய்யப்பட்டார்.
சமீபத்திய பார்லி., தேர்தலில் பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்துச் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் மயிலாப்பூரில் சாசுவதா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதிலல் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதனை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று திருச்சியில் கைது செய்தனர்.
