Edappadi Palaniswami:கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூடக் கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விடியாத் திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூடக் கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியாத் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

“கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்” என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்தப் பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க விடியாத் திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *