
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ED raid
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சண்முகம் என்பவரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வரப்பட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

