மீண்டும் அதிரடி செய்ய வரும் பிரதீப் ரங்கநாதன்..!

Advertisements

டிராகன்- 2′ விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதனின் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடித்த டிராகன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ‘டிராகன்- 2’ பட அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது சமூக வலைத்தளப் பதிவில், டிராகன் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்து உள்ளது என்றும் பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது என்றும் தெரிவித்தார். இதன் பின்னர், மீண்டும் ஒருமுறை இந்த கூட்டணி ஒன்றிணையவுள்ளது” என்றும் குறிப்பிட்டார். இதனிடையே, டிராகன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு நடிகர் பிரதீப் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

D

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *