
மயிலாடுத்துறையில் டிட்வா புயலால் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கியதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டை அடுத்த சின்ன பெருந்தோட்டத்தில் டிட்வா புயல் காரணமாகத் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த, தொடர் மழையால் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து, கடல் நீர் உட்புகாமல் ஆற்றின் முகப்பு துவாரத்தில் கதவணை அமைத்து தரவும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கவும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


