
சிவங்கையில் இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் பெரிய கருப்பன் இழப்பீடு தொகை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்குக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனும், மாவட்ட ஆட்சியர் பொற்கொடியும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அரசு சார்பில் மூன்று லட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கினர்.




