Rahul Gandhi:துணை சபாநாயகர் பதவி வேண்டும்!

Advertisements

துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கக் கோரினோம். ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை.

பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது தான் மரபு என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம்.மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம்.

மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவையே மீண்டும் முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஓம் பிர்லா சந்தித்து உள்ளார்.

மக்களவை சபாநாயகரை எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் தேர்வு செய்யத் தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது.துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கக் கோரினோம். ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை. பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *