
இங்கிலாந்தில் வாடகை வீடுகளுக்குக் கிராக்கி.
இங்கிலாந்தில் மக்கள் வாடகை வீடுகள் தேடி அலை மோதுகின்றனர். ஒரு வீட்டிற்கு 25 பேர் வீதம் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து மாதங்களாகக் காத்திருந்தும் வீடுகள் கிடைப்பது அரிதாக உள்ளதாகத் தெரிகிறது.மக்களின் தேவைகள் அதிகமாக அதிகமாக அவர்களுக்குப் பூர்த்தி செய்வதும் சவாலாக உள்ளது.
பிபிசி அளித்த தகவலின் படி, 2019-ல் வாடகை வேண்டுவோர், போன் மற்றும் இ- மெயில் மூலமாகவும் விசாரிக்கப்பட்டு, ஒரு வீட்டுக்கு 20 பேர் காத்திருந்த நிலையில், தற்போது 25 ஆக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்கள் இதுகுறித்து கூறுகையில் இந்த மாற்றம் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளதால் அவர்களால் மக்களின் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.




