
இலங்கையில் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ஆயிரத்து 850 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாகச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இலங்கையில், டிட்வா புயல் காரணமாகக் கனமழை பெய்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்தும், பொருளாதார மந்தநிலை காரணமாகவும் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ஆயிரத்து 850 கோடி ரூபாய் அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாகச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.

