
பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைநகர் மல்லிகார்ச்சுன கார்கே தலைமையில் நடைபெற்றது.
பாட்னா சதக்கத் ஆசிரமத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சல்மான் குர்சித், வீரப்ப மொய்லி, சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதிலும் இருந்து வந்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.





