Coimbatore:நான் கூப்பிடும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வரணும்..பெண்ணை மிரட்டிய வாட்ச்மேன்!

Advertisements

உல்லாசமாக இருந்த வீடியோவைக் காட்டி பெண்ணைத் தொடர்ந்து மிரட்டி வந்த காவலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் கிராமம் காந்தி காலனி மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (49). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த வழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவரும் நெருக்கமாகப் பழகி, தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த ஆபாச வீடியோவைக் காட்டி நான் சுபப்பிடும் போதெல்லாம் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தத அந்தப் பெண் வேறு வழி இல்லாமல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரங்கசாமியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வந்ததுமே ரங்கசாமி மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்துக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *