
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் கிம்பர்லி பைரெலை வீழ்த்தி எலினா ரிபாகினா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2 ஆவது சுற்று போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பைரெல் உடன் மோதினார். இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ரிபாகினா 2 – 0 என்ற நேர் செட் கணக்கில் கிம்பர்லி பைரெலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த, வெற்றியின் மூலம் எலினா ரிபாகினா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
.



