அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு- முதலமைச்சர் உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2023- 2024ம் ஆண்டிற்கான சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சி, டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.

சி, டிபிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *