
இந்தியா வந்த பிறகு 2017ல் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன் – வெப்பர் தம்பதி, சில மாதங்களிலேயே வாடகை தாய் முறையில் இரட்டை குழந்தை பெற்றெடுத்தனர்.இந்த நிலையில், அண்மையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சன்னி லியோன் தனது தாய்மை பயணம் குறித்து பேசினார். அதில், “38 வயதில் திருமணமாகி இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்தது. 10 மாதங்கள் வரை இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். ஆனால் நான் கருத்தரித்தபோது கருவில் எந்தவித வளர்ச்சியும் இல்லை.
இனி குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என மருத்துவர்கள் தெரிவிக்க, செயற்கை கருத்தரித்தல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லை.குறிப்பாக ஆறு கருக்களை உருவாக்கினோம். அதில் எங்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் இருந்தனர். பெண் குழந்தையை பெற்றுக்கொள்ளவே விரும்பினோம். ஆனால், நான்கு பெண் குழந்தைகளுக்கான கருக்கள் உயிர் பிழைக்கவில்லை. கருக்கள் மாற்றப்பட்டபோது, ஒரே வாரத்தில் உயிர் பிழைக்கவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர் நாங்கள் மருத்துவர்களை மாற்றினோம், இரண்டு ஆண் குழந்தைகளிலிருந்து இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம். கடவுள் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுக்காததை நினைத்து வருத்தப்பட்டதோடு அந்த நேரத்தில் குழந்தையை தத்தெடுக்கவும் விண்ணப்பித்திருந்தோம்.ஏனென்றால், செயற்கை கருத்தரித்தல், வாடகை தாய் போன்ற செயல்முறைகள் நீண்ட நெடியது என்பதால் அந்த முடிவை எடுத்தோம்.
ஒரு வாரத்தில் எங்கள் கருக்கள் மூலம் குழந்தைகள் பிறக்காது எனத் தெரிந்தபோது நாங்கள் அடைந்த வேதனை வெளியே தெரியாது. அதைப் பற்றி வெளியே சொல்லவில்லை. இக்கட்டான அந்த நேரத்தில் டேனியலும் நானும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான உணர்வுகளை கொண்டிருந்ததால், ஒருவருக்கொருவர் நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்து மீண்டு வந்தோம்.” என்று சன்னி லியோன் உருக்கமாக பேசியிருக்கிறார்.

